|
ஸ்ரீ பாண்டுரங்க பஜனாஸ்ரமத்தின்
தலைவர்
விட்டல்தாஸ் ஸ்ரீ ஜயகிருஷ்ண
தீக்ஷிதர் தஞ்சாவூர்
மாவட்டம் கோவிந்தபுரத்தில் ஒரு
விடோபா கோவில்
கட்டிவருகிறார். இந்தக் கோவிலை
பண்டரிபுரத்திலுள்ள
விடோபா கோவில் மாதிரியே அமைக்க
வேண்டும் என்று
தீக்ஷிதர் கருதியுள்ளார்.
கட்டப்பட்டுவரும் இந்தக்
கோவிலைச் சுற்றியுள்ள இடம்
’தக்ஷிணபண்டரிபுரம் எனப்
பெயரிடப்படவுள்ளது.
ஸ்ரீ விட்டல்தாஸின் கருத்துப்படி,
மராட்டி
அபங்கங்களைத் தமிழ்நாட்டில்
பாடும் பாரம்பரியத்தை
ஆரம்பித்த பெருமை, 300 ஆண்டுகளுக்கு முன் தேசம்
முழுவதும் சுற்றி, மராட்டி
அபங்கங்களையும் பஜன்களையும்
தமிழ்நாட்டிற்களித்த
மருதநல்லூர் ஸ்ரீ ஸத்குரு
ஸ்வாமிகளையே சேரும். "நாங்கள்
ஸ்ரீ ஸத்குருவின்
அடிச்சுவடுகளைப் பின் பற்றி,
அப்பாரம்பரியத்தக் காத்து
வருகிறோம்" என்று தீக்ஷிதர்
கூறுகிறார்.
அவருக்குப் பிடித்தமான
ஸந்த்
யாரெனக் கேட்டதற்கு,
சற்றே சிந்தித்துவிட்டு, "ஒரு
துகாராம், ஒரு நாம்தேவ், ஒரு
ஏக்நாத் ஆகியோருக்கு இடையில்
வித்தியாசம் காண்பது
அரிதாகும். இருந்தபோதிலும்,
துகாராம் மஹாராஜின்
அபங்கங்களைப் பாடும்போது
பக்தியும், ஆனந்தமும்
மேலிடுகின்றன என்பதை நான்
ஒப்புக்கொண்டே ஆக
வேண்டும்", எனச் சொன்னார்.
"ஸந்த்
துகாராம்
இணையற்றவர். ஏனென்றால், அவர்
பெரிய வேதாந்தக்
கருத்துகளை, சாமான்ய மனிதனின்
பாஷையாக
எளிமைப்படுத்தி விட்டார்",
என்பது ஸ்ரீ விட்டல்தாஸின்
கருத்து.
|